All articlesCommunity

வீர வன்னியர் புராணம் — கதைச் சுருக்கம்

18 July 2026 12 min read

இழந்ததை மீட்போம், இருப்பதை காப்போம்.

பங்குனி உத்திரம் — வீர வன்னியர் அவதாரத்திருநாள்! புறநானூறு சொல்லும் வீர வன்னியர் தோற்றம்!

தமிழ் நாட்டின் ஒரே க்ஷத்திரிய இனமான வன்னியர்களின் புகழ்பாடும் திருநாளாகத் திகழ்வது பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் தான் சம்பு மஹாரிஷியின் யாக குண்டத்திலிருந்து உருத்திர வன்னியர் வில்லோடு தோன்றினார் என்பது புராணக் கூற்று.

கபிலர் பாடல்

இதற்கு சான்றாக நிற்பது புறநானூற்றின் 201-வது பாடல். மூவேந்தர்களால் கொல்லப்பட்ட பறம்பு மலையின் மன்னன் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரை மணந்து கொள்ளுமாறு புலிகடிமால் என்ற மன்னனிடம் கபிலர் வேண்டுகோள் விடுப்பதே இந்தப் பாடலாகும். இப்பாடலில் கபிலர் தன்னை அந்தணன் என்றும், க்ஷத்திரிய வேந்தனாகிய புலிகடிமாலை வடபால் முனிவன் செய்த யாகத்தில் உதித்தவன் என்றும் கூறுகிறார்.

கம்பர் காலம்

கம்பர் தம்புரையுடன் சிலப்பதிகாரம் பாடிய சங்க காலம் பின்னர் மீண்டும் அவர் இந்த புராணத்தைக் குறிப்பிடுவது தெரிகிறது. எனவே அவர் காலத்தில் வன்னியர் தொடர்பான புராண வரலாறு இருந்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். குறிப்பாக, வன்னியர் என்பது 12-ம் நூற்றாண்டில் தான் அறியப்படுகிறது என்று சிலர் கூறினாலும், கம்பர் 12-ம் நூற்றாண்டில் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர்.

கம்பர் தமது புராணத்தின் துவக்கத்திலும், பிற பாகங்களிலும் வன்னியர் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் வன்னியர் சொல் அந்தக் காலத்திலேயே புழக்கத்திலிருந்தது தெளிவாகிறது. அந்த வகையில் பங்குனி உத்திரம் தொடர்பான வரலாறும் கம்பர் பாடல்களில் அமைந்துள்ளது.

பங்குனி உத்திரத் திருநாளை வன்னியர்கள் பெயர், புகழ், வம்சம், கோத்திரம், வாழ்வு, வரலாற்றை நினைவு கூறும் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் கலாச்சாரத்திலும், சமூகத்திலும் இந்த நாள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வன்னிய இனம் 12-ம் நூற்றாண்டிற்கு பிந்தைய காலத்தில் தான் உருவானது என்ற கணிப்பு முற்றிலும் தவறானது என்பது வரலாற்று ஆய்வுகளால் தெளிவானது. இந்தத் தவறான கணிப்பு வன்னியர்களைப் பற்றிய வரலாற்றைத் திரித்துக் காட்டுகின்றது என்பதை புராணமும் பிற வரலாற்று ஆதாரங்களும் உணர்த்துகின்றன.

திருவாதவூரார் — திருவிளையாடல்

திருவிளையாடல் புராணத்தில் திருவாதவூரார் என்னும் சிவனடியார், ஒருசமயம் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டுக்கு வருகை தந்தார். அவர் சோழ நாட்டில் ஒரு பிராமணனின் வீட்டில் விருந்துண்டு கொண்டிருந்தபோது, அவனுடைய பையன் வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனைக் கண்டான். உடனே அவன், 'இந்த வீரன் வன்னியன்' என்று கூறினான்.

அதைக் கேட்ட திருவாதவூரார், 'வன்னியர் என்பவர் யாவர்?' என்று கேட்டார். அதற்கு அவ்வீரன், 'நாங்கள் பாண்டிய குலத்தைச் சேர்ந்தவர்கள்' என்று கூறினான். இதிலிருந்து வன்னியர் என்போர் பாண்டியர் குலத்தவர் என்பது தெரிகிறது.

வன்னியர் யார்?

மரபியல் அடிப்படையில் சாக்தம், வைணவம், சைவம், கௌமாரம், காளிகம், கர்ப்பம், யாகம், சூரிய குலம், சந்திர குலம் என்று வரலாற்று வகைப்படுத்தல்களால் வன்னியர் குலத்திற்கு நிலைத்த சிறப்பு இருந்துள்ளது.

அக்னி புராணம்

சிவபெருமானால் அக்னிக்கு வரம் அளிக்கப்பட்டதைப் பற்றிக் கூறுமிடத்தில், அக்னியும் அவருடைய வரங்களும் தெய்வங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அக்னிக்கு ருத்ரன் மூலமாகவும் தவக்கொடைகளைத் தாங்கிக் கொண்டு அவனை விஸ்வரூபனாக்கி அமைத்தனர். அதனால் அவன் பல வடிவங்களைப் பெற்றான். புராணங்களில் கூறப்படும் வன்னியர் யார் என்பதற்கு அக்னி புராணத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வன்னியர் புராணம் — மிகப் பழமையானது

வன்னியரைப் பற்றிய தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில், வன்னியர் புராணம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. வன்னியர்கள், முதன்மையான தெய்வமான சிவபெருமானாலும் விஷ்ணுவினாலும் வரமளிக்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான தெய்வங்களைக் கொண்டுள்ளனர். வன்னியர்கள் தங்கள் மரபு தொடர்பான வரலாற்றையும் புராணங்களையும் தங்கள் அடையாளங்களாகக் கொண்டுள்ளனர்.

மகாபாரதம், பகவத் கீதை, ராமாயணம், ஹரிவம்சம் போன்ற புராணங்களில் வன்னியர் மற்றும் அவர்களுடைய வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர்கள் மன்னர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வன்னியர் புராணமும் வரலாற்று ஆதாரங்களும்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்க இலக்கியங்கள், புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல் போன்ற பல இலக்கியங்கள் வன்னியர் குலத்தைப் பற்றிப் பேசுகின்றன. வன்னியர் புராணத்தின் படி, வன்னியர்கள் மூன்று குலங்களைச் சேர்ந்தவர்கள் —

  • சூரிய குலம்
  • சந்திர குலம்
  • அக்கினி குலம்

வடமொழி புராணம்

வடமொழியில் எழுதப்பட்ட வன்னியர் புராணத்தை மதுரை அரசாண்ட பாண்டிய மன்னர் கோச்சடையன் என்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கேட்டுக் கொண்டதன் பேரில் (கி.பி. 1251) அவரது அரசவையின் அவைப் புலவரான வீரப்பிள்ளை என்பவரால் வன்னியர் புராணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

அதில் பங்குனிமாத உத்திர நட்சத்திரத்தன்று சம்பு மஹாரிஷி செய்த மஹாயாகத்தில் வீரவன்னியர் பிறந்ததாக வன்னியர் புராணம் குறிப்பிடும் நிகழ்வை, தமிழ்நாட்டில் வன்னிய சமூகத்தினர் 'வன்னியர் புராணம்' என்ற நாடகத்தை விரதமிருந்து பக்தியோடு இன்றும் நடத்திக்கொண்டாடி வருகின்றனர். வீரப்பிள்ளை புலவர் வன்னிய புராணத்தைத் தமிழில் எழுதிய நூலின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

வன்னிய புராண காலம்

புராணம் என்றால் மிகவும் பழமையானது என்று பொருள். வன்னியர் பிறப்பு நிகழ்ந்ததாக வன்னியர் புராணத்தில் சொல்லப்படும் காலம் முதற் சங்கக் காலமா, இடைச் சங்கக் காலமா, கடைச் சங்கக் காலமா என்று ஆய்வு செய்தால், அது மூன்று சங்கக் காலத்திற்கும் முந்தையது என்றே தெரிய வருகிறது.

கந்தபுராணம் கால நிகழ்வுக்கு பின்னர் இராமாயணம் நடந்திருக்கிறது; இராமாயணத்திற்கு பின்னர் மகாபாரதம் நடந்திருக்கிறது. வன்னியர் புராணம் நிகழ்ந்த காலமும் கந்த புராணம் நிகழ்ந்த காலமும் சமகாலம் என்றே சொல்ல வேண்டும் — ஏனெனில் வன்னியர் பிறப்பு பற்றி கந்த புராணத்திலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்திரனின் மூத்த மகள் தெய்வானை (தேவசேனா) முருகப்பெருமானையும், இளைய மகள் மந்திரமாலையை வீரவன்னியரும் திருமணம் செய்து கொண்டதாக வன்னியர் புராணம் சொல்கிறது.

சூரபத்மன் தங்கை அஜமுகி

கொடியவன் சூரபத்மன் என்ற அசுரனை சிவனின் மைந்தனான முருகப் பெருமான் வதம் செய்து அழித்ததும், அந்த நிகழ்வுக்கு 'சூர சம்ஹாரம்' என்று பெயர் வழங்கப்பட்டு அந்த நாள் திருவிழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவதும் நமக்குத் தெரிந்தது.

சூரபத்மனின் சகோதரி அஜமுகியின் மைந்தர்களான வாதாபியும் வில்லவனும் சூரபத்மனைவிட மிகக் கொடூரமானவர்கள். வில்லவன் அகத்திய முனிவரால் அழிக்கப்பட்ட பிறகு, வாதாபி நெடிய தவம் இருந்து மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும், முனிவர்களாலும், பெண்களாலும், கணநாதனாலும், முருகப் பெருமானாலும், நிலம் நீர் காற்று ஆகாயத்தினாலும் தன்னை அழிக்க முடியாத வரங்களை சிவபெருமானிடமிருந்து வேண்டிப் பெற்றான்.

வரம் பெற்ற வாதாபி தேவர்களையும் முனிவர்களையும் அப்பாவி மக்களையும் கொடூரமாக கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவர்களது உடைமைகளைக் கொள்ளையடித்து பெரும் நாசம் செய்து தனது கொடுங்கோல் ஆட்சியைத் தொடர்ந்தான். வாதாபியின் கொடுமைகளைத் தாங்க முடியாத முனிவர்களும் தேவர்களும் அவனை அழிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினர்.

சம்பு மஹாரிஷி

சிவனிடம் வாதாபி பெற்ற வரத்தின்படி அக்கினியில் பிறந்த ஒரு வீரனால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதால், மஹாரிஷிகளில் சக்திவாய்ந்த சம்பு மஹாரிஷியிடம் சிவபெருமான் யாகம் நடத்தி அருளும்படி கேட்டுக் கொண்டார். யாகம் செய்வதற்கு தெய்வீகத்தன்மை வாய்ந்த கயிலாய மலையின் வலது பக்கம் தேர்வு செய்யப்பட்டது.

சிவபெருமானின் வேண்டுகோளின்படி சம்பு மஹாரிஷியின் தலைமையில் பிரமாண்ட புத்திர காமேஷ்டியாகம் நடைபெற்றது. அந்த யாகம் நடைபெற்ற பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தன்று சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து வியர்வை வடிந்தது. அந்த வியர்வையை சிவபெருமான் செங்கழுநீர் பூவில் எடுத்து யாகத்தில் ஆயுதம் கொடுத்தார்.

உருத்திர வன்னியர் பிறப்பு

சிவபெருமான் நெற்றிக்கண் வியர்வையிலிருந்தும் செங்கழுநீர் பூவிலிருந்தும், வெள்ளை அக்கினி குதிரையில் அமர்ந்தவாறு ஆடை, ஆபரணம், வில், அம்பு, கத்தியுடன் கூடிய 32 விருதுகளுடன், பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளில் உருத்திர வன்னியன் எனும் வீரவன்னியனும் அந்த யாக அக்கினியிலிருந்து இடியோசையுடனும் பேரொளியுடனும் தோன்றினார். பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வளர்த்த யாக தீயிலிருந்து திரௌபதை தோன்றியதுபோல், யாக தீயிலிருந்து வீரவன்னியர் தோன்றினார் என்கிறது வன்னிய புராணம்.

அவதரித்த உருத்திர வன்னியர் உலகில் அமைதியை நிலைநாட்ட, கொடியவன் வாதாபியின் அராஜகச் செயல்களை ஒழித்து அவனை அக்கினி அஸ்திரம் எனும் நெருப்பு ஆயுதத்தால் வதம் செய்து, அவனது கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலக மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் பாதுகாத்தார்.

இந்திரனுக்கும் அவரது மனைவி இந்திராணிக்கும் தெய்வாணை மற்றும் மந்திரமாலை என்ற இரு பெண்கள் பிறந்திருந்தனர். தெய்வாணையை முருகப்பெருமான் மணமுடித்தார்; அவளது தங்கை மந்திரமாலையை உருத்திர வன்னியர் திருமணம் செய்து திறம்பட ஆட்சி செய்தார் என்று வன்னிய புராணம் சொல்கிறது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள், இராமாயண யுத்தம் 14 நாட்கள்; அதேபோல் வீரவன்னியர் – அசுரர்கள் யுத்தம் 12 நாட்கள் நடந்தன.

வடநாட்டு வன்னியர்கள்

வடநாட்டில் அக்கினி குல சத்திரியர்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் —

  • செளகான் (Chauhan)
  • சோலங்கி (Solanki)
  • பிரமாரா (Pramara)
  • பிரத்தியாரா (Prathiara)
  • பரிஹாரா (Parihara)

திருவானைக்காவல்

வீரவன்னியர்கள் அக்கினியில் உதிக்கக் காரணமான சம்பு மஹாரிஷி மீண்டும் ஐம்பு (நாவல்) காட்டில் தவமிருக்கத் தொடங்கிய போது, அவரது மடியில் ஒரு வெந்நாவல் பழம் விழுந்தது. அதை மஹாரிஷி எடுத்துக் கொண்டு கயிலை நோக்கிச் சென்று சிவபெருமானிடம் கொடுத்தார். அப்பழத்தை அமுதினும் மேலாகக் கருதிய உமையொருபாகன் அதைச் சாப்பிட்டு விட்டு கொட்டையை உமிழ்ந்தார். அருகிலிருந்த சம்பு மஹாரிஷி அந்தக் கொட்டையை பிரசாதமாகக் கருதி எடுத்து சாப்பிட்டார்.

வயிற்றுக்குள் சென்ற அந்தக் கொட்டை முளைவிட்டு அவரது தலையில் எழுந்து பெரியதொரு வெந்நாவல் மரமாக வளர்ந்து வெளிப்பட்டது. அந்த அற்புதத்தைக் கண்ட மஹாரிஷி ஈசனின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அவரது பக்திப் பெருக்கை உணர்ந்த இறைவன், 'மஹாரிஷியே, தென்னகத்தில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றங்கரையில் அன்னை அகிலாண்டேஸ்வரி மோனதவம் இயற்றும் நாவல் காட்டில் போய் இரு. நான் சிவலிங்கமாக நின் அடி நிழலில் தங்கி உனக்கும் உன் சந்ததியினருக்கும் (வன்னியகுல சத்திரியர்கள்) அருள்புரிவேன்' என்றார்.

இறைவனின் கட்டளையை ஏற்ற சம்பு மஹாரிஷி திருச்சி அருகில் உள்ள திருவானைக்கா திருத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். அந்த ஐம்பு மரத்தின் (வெந்நாவல் மரம்) கீழ் லிங்க வடிவில் சிவபெருமான் ஐக்கியமானதால் இங்கு இறைவன் ஐம்புகீழ் ஈஸ்வரர் (ஐம்புகேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறார். வெந்நாவல் மரத்துடன் அமர்ந்து தியானம் செய்வதால் அந்த மகாரிஷி 'ஐம்பு மகாரிஷி' எனவும் பெயர் பெற்றார்.

கோச்செங்கண் நாயனார் (கோச்செங்க சோழன்)

வன்னியகுல சத்திரிய வம்சம் உருவாகக் காரணமாக இருந்த சம்பு மஹாரிஷிக்கும் சிவபெருமானுக்கும் ஒரே கோயில் எழுப்ப வேண்டும் என திட்டமிட்டு, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவானைக்கா எனும் பிரம்மாண்ட சிவன் கோயிலை எழுப்பியவரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான சோழ மன்னன் கோச்செங்கணான் அவர்களை நாம் போற்றி வணங்க வேண்டும்.

வன்னியர் பிறப்பு நிகழக் காரணமானவரும், திருவானைக்கா ஐம்புகேஸ்வரர் திருத்தலத்தில் ஸ்தல விருட்சமான வெந்நாவல் மரத்தைத் தலையில் தாங்கி தியானம் செய்து கொண்டிருப்பவருமான சம்பு மஹாரிஷியையும், தெய்வ அம்சங்கள் நிறைந்த பங்குனி உத்திர திருநாளையும் வழிபடுவது வன்னியர்களது கடமையாகும்.

பங்குனி உத்திரம்

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட சம்பு மஹாரிஷி செய்த யாகத்தில், பங்குனி உத்திர திருநாளில் வெள்ளைக் குதிரையுடனும் 32 விருதுகளுடனும் வீர வன்னியர் தோன்றினார் என்று வன்னியர் புராணம் சொல்கிறது. அந்த வீர வன்னியர் பிறந்த பங்குனி உத்திர திருநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்னியர்களின் எழுச்சி திருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வன்னியர் புராணத்தின் படி, வன்னியர்கள் சூரிய குலம், சந்திர குலம், அக்கினி குலம் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். கந்த புராணத்திலும் பிற புராணங்களிலும் வன்னியர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. வன்னியர் குலம், தமிழகத்தின் பழமையான குலங்களில் ஒன்றாகும்.

புராண வகைகள்

ஆக்கினேய புராணம் (அக்கினி புராணம்), இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பாகவத புராணம், ஹரி வம்சம் ஆகியவற்றின் சாரம் அடங்கிய இப்புராணம், யாகமுறை, திருமால் தீட்சை, சிவ பூஜை, பிரபஞ்ச இலக்கணம், அரசாட்சிமுறை, ஆலய நிர்மாணம், தர்ம முறைகள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் நாகரீக சின்னமாக விளங்குகிறது. வன்னிய புராணத்தை வியாச மஹரிஷி சூதனுக்கு உரைக்க, சூத மஹரிஷி சனக மஹரிஷிக்கு உரைக்க, சனக மஹரிஷி அத்திரி மஹரிஷிக்கு கூறுவதாக உள்ளது.

  • மகாபுராணங்கள் – 18
  • உபபுராணங்கள் – 18

Frequently Asked Questions

வீர வன்னியர் புராணம் என்றால் என்ன?

வன்னியகுல க்ஷத்திரியர்களின் தோற்றம், வரலாறு மற்றும் மரபை விவரிக்கும் தமிழ்ப் புராணமே வன்னியர் புராணம். பங்குனி உத்திரத்தில் சம்பு மஹாரிஷியின் யாக அக்கினியிலிருந்து உருத்திர வன்னியர் தோன்றியதும், அவர் அசுரன் வாதாபியை வதம் செய்ததும் இதன் மைய நிகழ்வுகள்.

பங்குனி உத்திரம் வன்னியர்களுக்கு ஏன் சிறப்பு?

பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளில்தான் யாக அக்கினியிலிருந்து வீர உருத்திர வன்னியர் தோன்றினார் என்று புராணம் கூறுகிறது. எனவே இந்நாள் வீர வன்னியர் அவதாரத்திருநாளாகவும், வன்னியர்களின் எழுச்சி திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

வன்னியர்களின் மூன்று குலங்கள் யாவை?

வன்னியர் புராணத்தின் படி வன்னியர்கள் சூரிய குலம், சந்திர குலம், அக்கினி குலம் என்ற மூன்று குலங்களைச் சேர்ந்தவர்கள்.

வடமொழி வன்னியர் புராணம் தமிழில் எப்போது மொழிபெயர்க்கப்பட்டது?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் வேண்டுகோளின் பேரில் (கி.பி. 1251), அரசவைப் புலவர் வீரப்பிள்ளையால் வன்னியர் புராணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

Free Vanniyar Matrimony

Create your profile and connect with verified Vanniyar brides and grooms — completely free, no hidden fees.

Browse Free Matrimony

More from the blog

Matrimony

இலவச தமிழ் மேட்ரிமோனி — கட்டணமே இல்லாத திருமண தளம்

பல "இலவச" மேட்ரிமோனி தளங்கள் — செய்தி அனுப்பும் வரை மட்டுமே இலவசம். இது அப்படி இல்லை. நாம் வன்னியரில் இலவசம் என்பதன் முழு அர்த்தம், நீங்கள் பெறுவது என்ன, மற்றும் வழக்கமாக கட்டணச் சுவர் எங்கே இருக்கும்.

Matrimony

தமிழ் மேட்ரிமோனி இலவச பதிவு — படிப்படியான வழிகாட்டி

நாம் வன்னியரில் இலவசமாகப் பதிவு செய்வதற்கான புலம்-வாரியான வழிகாட்டி — தொடங்கும் முன் தயாராக வேண்டியவை, ஒவ்வொரு பகுதியின் பயன், சமர்ப்பித்த பிறகு நடப்பது என்ன.

Matrimony

கட்டணமில்லாத மேட்ரிமோனி — நுண்ணிய எழுத்துக்களைப் படியுங்கள்

மேட்ரிமோனி தளங்களில் "இலவசம்" என்பது பொதுவாக இலவசப் பதிவு, கட்டண மற்ற அனைத்தும் என்று அர்த்தம். கட்டணச் சுவர் வழக்கமாக மறைந்திருக்கும் ஏழு இடங்கள் இவை.